ஞாயிறு, 16 ஆகஸ்ட், 2020

அறுபடை வீட்டு சஷ்டி கவசங்கள்


முருகனின் அறுபடை வீடுகள் மீது தேவராய சுவாமிகள் பாடியதாக கூறப்படும் கந்த சஷ்டி கவசங்கள் பற்றி முன்னமே பார்த்திருந்தாலும், அனைத்தும் ஒரே புத்தகமாக கிடைக்கவில்லை. இப்பொழுது ஒரே புத்தகமாக கிடைத்திருக்கிறது. இது 1990 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டுள்ளது. இதைவிட பழைய புத்தகம் கிடைக்காததால், இது நாம் அனைவரும் போற்றும் கவசம் எழுத்திய தேவராயர் எழுதியதுதானா என்பதில் ஐயம் இருந்தாலும். நம்புவோமாக.


தரவிறக்க: அறுபடை வீட்டு சஷ்டி கவசங்கள்

புத்தகத்தின் உரிமை, ஆசிரியர் மற்றும் பதிப்பாசிரியருக்கே.

சனி, 29 பிப்ரவரி, 2020

சுப்பிரமணியர் கார்த்திகை கவசம்


சென்ற முறை தேடிக்கிடைத்த முருகன் கவசம் போன்றே இந்த முறையும் ஒரு கவசம் கிடைத்துள்ளது. இதன் பெயர் சுப்பிரமணியர் கார்த்திகை கவசம். இதனை சித்த வைத்தியர் ஸ்ரீநிவாஸயோகி என்பவர் இயற்றியுள்ளார். இவர் காஞ்சியில் உள்ள திருநெறிகாரைக்காடென்னும் திருக்காலிமேடாம்பதி பழனியாண்டி சித்தாஸ்ரமத்தில் சித்த வைத்தியராக இருந்துள்ளார்.

இந்த புத்தகத்தில் விநாயகர் அகவலும் உள்ளது.

இணைப்பு: சுப்பிரமணியர் கார்த்திகை கவசம்