வியாழன், 10 அக்டோபர், 2019

திருமகள் பாடல்

செந்தாமரை மலரில் திகழ்கின்றவள்
ஶ்ரீரங்க நாதனெடு மகிழ்கின்றவள் (செந்தா)

சந்தான செளபாக்யம் தருகின்றவள்
தட்டாமல் ஒடோடி வருகின்றவள் (செந்தா)

வற்றாது பால்வழங்கும் பசுவானவள்
மடிமீதில் உறவாடும் சிசுவானவள் (செந்தா)

கற்றார்க்கும் கல்லார்க்கும் உயிரானவள்
கண்போகும் இடம்எங்கும் பயிரானவள் (செந்தா)

நன்செய்யும் புன்செய்யும் தானானவள்
நவதான்யப்புலம் எங்கும் மானானவள் (செந்தா)

பொன்செய்யும் வேளாளர் கரமானவள்
புவியோரை வாழ்விக்கும் வரமானவள் (செந்தா)

ஒலி: youtube.com

வியாழன், 26 செப்டம்பர், 2019

முருகர் கவசம்



கந்தர் சஷ்டி கவசம், கந்த குரு கவசம், ஷண்முக கவசம் வரிசையில் இன்று இணையத்தில் தேடியதில் புதிதாக முருகர் கவசம் என்று ஒன்று கிடைத்தது. இதனை கூடலூர் இருளப்ப செட்டியார் இயற்றியுள்ளார். இதில் சில பகுதிகள் காகித கிழிசலில் இருப்பதால், என்ன வரிகள் என்று முழுமையாக தெரியவில்லை. தற்போது தேடியதுவரை வேறு பதிப்போ அல்லது புத்தகமோ இருப்பதாக தெரியவில்லை. ஒருவேளை முருகனருளினால் வரும் காலங்களில் பகிர்கிறேன்.

இணைப்பு: முருகர் கவசம்

புதன், 25 செப்டம்பர், 2019

வாலை கும்மி

சித்தர்கள் வணங்கிய, குழந்தையென கொஞ்சிய, அருள் பொழியும் வாலை பெண்ணின் கும்மி பாட்டு. சிலர் இவளை பாலா எனவும், சிலர் இவளே திரிபுர சுந்தரி எனவும் அன்னை மனோன்மணியின் பிள்ளை பருவம் எனவும் கூறுகின்றனர். கேட்பவருக்கு கேட்பவற்றை அள்ளி வழங்கும் குழந்தை இவள்.

வாலை பெண்

இணையத்தில் கிடைத்த சித்தர் மகான் கொங்கணர் எழுதியதாக கிடைத்த "வாலை கும்மி"  என்னும் நூலையும், அதன் பாடலையும் இணைப்பில் எடுத்துக்கொள்ளலாம்.

குறிப்பு: இணைப்பில் உள்ள அனைத்தின் முழு உரிமையும் ஆசிரியருக்கே.

புத்தகம் 1: வாலை கும்மி

புதன், 18 செப்டம்பர், 2019

முருகவேள் பன்னிரு திருமுறை - மின்னூல்

தணிகைமணி வ. சு. செங்கல்வராயபிள்ளை
தணிகைமணி வ. சு. செங்கல்வராயபிள்ளை


வணக்கம்,

ஏற்கனவே முருகவேள் பன்னிரு திருமுறை பற்றி பதிவிட்டிருந்தேன், பல இடங்களில் தேடியும் திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் பதிப்பித்த புத்தகம் கிடைக்கவில்லை. தற்செயலாக இணையத்தில் தேடியபொழுது தணிகைமணி வ. சு. செங்கல்வராயபிள்ளை அவர்கள் உரையெழுத்திய புத்தகங்கள் மின் நூலக கிடைத்தது, அதுவும் இரு வேறு பதிப்பகத்தார் பதிப்பில். இதனை பின்வரும் இணைப்புகளில் பதிவிறக்கிக்கொள்ளலாம்.

பதிப்பாளர்: ஸ்ரீ மதி மீனாட்சி கல்யாண சுந்தரம்
ஆண்டு: 1952


பதிப்பாளர்: திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம்
ஆண்டு: 1992 


புத்தகத்தின் உரிமை, ஆசிரியர் மற்றும் பதிப்பாசிரியருக்கே.

புதன், 4 செப்டம்பர், 2019

கந்தர் சஷ்டி கவசம் - விளக்கம்

மிகவும் புகழ்பெற்ற பரிச்சியமான ஸ்ரீ தேவராய சுவாமிகள் எழுதிய திருச்செந்தூர் கந்தர் சஷ்டி கவசத்தினுடைய பொருள் பெரும்பாலும் எளிதாக விளங்கினாலும், சில வார்த்தைகளின் பொருள் புரிவதில்லை என்ற கருத்து பரவலாக உள்ளது. அதன் பொருட்டு இணையத்தில் தேடியதில் ஒரு புத்தகம் கிடைத்தது. அதன் பெயர் கந்தர் சஷ்டி கவசம் - மூலமும் மெய்ப்பொருள் விளக்க விருத்தி உரையும் ஆசிரியர் திரு. அமிர்தம் சுந்தரநாத பிள்ளை.

இதனை பின்வரும் இணைப்பில் பதிவிறக்கிக்கொள்ளலாம்.


புத்தகத்தின் உரிமை, ஆசிரியர் மற்றும் பதிப்பாசிரியருக்கே.

வெள்ளி, 26 ஜூலை, 2019

ஸ்ரீ லலிதா சகஸ்ரநாமம்

அன்னை லலிதா திரிபுர சுந்தரியின் ஆயிரம் (ஆயிரத்து எட்டு) பெயர்களை கூறி போற்றுவதே ஸ்ரீ லலிதா சகஸ்ரநாமம்.


இதை கல்வியின் கடவுளாக போற்றப்படும் ஹயக்ரீவர், அகத்திய மகரிஷிக்கு கூறியதாக போற்றப்படுகிறது. மேலும் இது அன்னையின் வழிகாட்டுதலின் படி இது வாக் தேவதைகளால் உருவாக்கப்பட்டது என்றும் கூறுவர். எது எப்படியாகினும் இதனை கேட்கும்போதும் படிக்கும் போதும் மனதில் ஒரு உற்சாகமும் ஆழ்ந்த அமைதியும் ஏற்படுவதை உணர முடியும்.

தரவிறக்க:
புத்தகமாக: ஸ்ரீ லலிதா சகஸ்ரநாமம்
ஒலிவடிவில்: ஸ்ரீ லலிதா சகஸ்ரநாமம்

குறிப்பு:
இணையத்தில் கிடைத்த நூல் மற்றும் இசை, இதன் முழு உரிமையும் ஆசிரியர், பதிப்பாகத்தார் மற்றும் இயற்றியவர்க்கே.

உரிமையாளர் விருப்பத்திற்கிணங்க எப்பொழுது வேண்டுமானாலும் இணைப்பு துண்டிக்கப்படலாம்.

வெள்ளி, 8 பிப்ரவரி, 2019

பழனி திருத்தல வரலாற்று நூல்கள்

பழனியம்பதி என்று எல்லோராலும் அழைக்கப்படும் பழனி மலை முருகன் கோவிலின் வரலாற்றை குறிப்பிடும் பழைய நூல் ஓன்று இணையத்தில் கிடைத்தது. விருப்பமுள்ளவர்கள் தரவிறக்கி பயன்படுத்திக்கொள்ளலாம்.




குறிப்பு:
இணையத்தில் கிடைத்த நூல், இதன் முழு உரிமையும் ஆசிரியர் மற்றும் பதிப்பாகத்தார்க்கே.

உரிமையாளர் விருப்பத்திற்கிணங்க எப்பொழுது வேண்டுமானாலும் இணைப்பு துண்டிக்கப்படலாம்.